Thursday, October 29, 2009

நிறக்குருடன்

செடியில் வண்ணத்துப்பூச்சி

பறக்கும் பூக்கள்

Thursday, October 22, 2009

தவம்

ஆடிக் கொண்டிருந்த
இதயக்கதவு வழி நுழைந்தது ...
இள்கிய இடுக்குகளில்
வேர் விட்டு
இதய இரத்தம் பருகி
வளர்ந்தது ..
சூழலின் வெம்மையில்
கவிதை ஒளியில்
மின்னித் துளிர்விட்டது ...
உன் எதிர்ப் படலில்
வானைத் தேடியது ..
உனது முதல் பார்வையில்
ஆயிரம் கிளைகளை விரித்து ...
குறி்ஞ்சியாய் இன்னமும் ...
பூக்கக் காத்திருந்தது ...

Saturday, October 10, 2009

தமிழ் மாணவன்

கருவில்  பிறந்த ஆசையாய் இருக்கலாம் ,

அன்னை முக‌த்தில் படித்தது 

மார் புதைக்கையில் மறைந்து போனது 

தேமா புளிமா என சீர் பிரிக்கையில் 

வெறும் தளைதான் எஞ்சியது

கனவினில் வந்தது 

விடிகையில் க‌லைந்த‌து,

ப‌ய‌ண‌த்தில் வந்த‌வை 

முடிகையில் சென்ற‌து,

கலவியில் பிறந்தது

புலர்கையில் சென்றது

 

போதையில் பூத்தது

பாதையில் காய்ந்தது



உளியின்  கூர்மையுடன் 

எழுத்தெடுத்து

 சுய‌ம்புவாய் ம‌ண்முட்டி வெளிவ‌ருகையில்


"க‌விதை யெழுத‌ முய‌ன்ற‌வன்" என‌ 

க‌ல்ல‌றையில் எழுத‌ வேண்டிய‌த‌யிற்று

அவ‌ன் க‌விதையை..