Thursday, January 14, 2010

கவிதை இறந்தது

தமிழர் சாவதை
தமிழகம் நோக்கி-
இருந்தது கண்டு
 கவிதை இறந்தது

மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது


கண்ணீரின் வரிகள்
இரத்தத்தில் மறைவதை
கடவுளர் காணாத போது
கவிதை இறந்தது

Saturday, January 9, 2010

சுவை

நெஞ்சோடு பேசும் புத்தகங்கள்
இசையில் சமைந்த கவிதைகள்
மீதமிருக்கும் தேநீர்கிண்ணம்
வாழ்க்கை

தப்பு குறிப்புகள்

என் கவிதை புத்தகத்தில்
எழுத நிறைய பக்கங்கள்
பின்னால் இருந்து

நினைவோடை

அன்று
கன்னம் வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கைகள் அற்று
இருந்த போது ...
காற்றின் கைகளோடு உன் நினைவு
உடனிருந்தது

தரைக்கு மேலே அனைத்தும்
காய்ந்த நிலையிலும்
வேரின் ஈர உயிர்ப்பாய்
உன் நினைவு
மட்டும்