Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, July 19, 2010

தேசம்

தலையை புறமிழுத்து
காற்றை  உள் வாங்கினான்
கயத்தாறை கடந்தது வண்டி.

பசித்திருந்தவை

சுண்டிய மடுவுடன்
காகிதம் தின்றது
மாலையிலாவது பால்தர
கன்றுக்கு.

நிர்வாண ஓவியத்தில்
பிரகாசமாய் அவள் முகம்
அன்று அவள் வீட்டில்
அடுபெரிந்திருக்கும் .

டை பார்த்தான்
பார்வையற்றவரிடம்
தினமும்.

தெய்வங்கள்

தனித்த நள்ளிரவில்
நெடிய ஒருவழியில்
சோகங்களின் உடனிருப்பில்
உம் அகம் பிரித்தீர்
நான் யாரிடம் .... ?

Wednesday, May 26, 2010

தனித்திருந்தவை

னதில் நீ
தெருவெங்கும் பூந்தோட்டம்


ன்மீது வடியும் என் அன்பின் எச்சம்
உலகத்தை நிறைக்கிறது



பிற காதல் இணைகளின்
கண் நம்மீது படக்கூடும்
எச்சரிக்கை



தூரமும் காலமும்
செய்யும் சதி கரைகிறது
நம் தொலைஉணர்வில்




பேசும் நேரத்திலும்
பேசா தனிமை இனியது
நம் வசந்தத்தின் அசைபோடல்


ன்ன நடனம்
என் இதய துடிப்புக்கு
உன் இமைகள் செய்வது .


காற்றை கையடக்கி
காண்பவரை மடமாக்கும்
தேன்கிண்ண குழந்தை
இன்று நீஎனக்கு.


நான் உன்னை கண்டபின்
காதலனது
என் பேனாவுக்கும்
காகிதத்திற்கும்.

Friday, May 14, 2010

உன் கோபம்

என்
முன்னாள் காதலி பற்றி
இனி பேசுவதில்லை
கொஞ்சம் சிரி

முகமூடி

உன்  முகம்
கண்ட
உலக அழகிகள்
அணிவதற்காக

Thursday, January 14, 2010

கவிதை இறந்தது

தமிழர் சாவதை
தமிழகம் நோக்கி-
இருந்தது கண்டு
 கவிதை இறந்தது

மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது


கண்ணீரின் வரிகள்
இரத்தத்தில் மறைவதை
கடவுளர் காணாத போது
கவிதை இறந்தது

Saturday, January 9, 2010

சுவை

நெஞ்சோடு பேசும் புத்தகங்கள்
இசையில் சமைந்த கவிதைகள்
மீதமிருக்கும் தேநீர்கிண்ணம்
வாழ்க்கை

தப்பு குறிப்புகள்

என் கவிதை புத்தகத்தில்
எழுத நிறைய பக்கங்கள்
பின்னால் இருந்து

நினைவோடை

அன்று
கன்னம் வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கைகள் அற்று
இருந்த போது ...
காற்றின் கைகளோடு உன் நினைவு
உடனிருந்தது

தரைக்கு மேலே அனைத்தும்
காய்ந்த நிலையிலும்
வேரின் ஈர உயிர்ப்பாய்
உன் நினைவு
மட்டும்

Friday, November 20, 2009

பூக்கள் அழகுதான்

எதிரி வாசலில் 
 
பூத்தாலும் 

Thursday, October 29, 2009

நிறக்குருடன்

செடியில் வண்ணத்துப்பூச்சி

பறக்கும் பூக்கள்

Thursday, October 22, 2009

தவம்

ஆடிக் கொண்டிருந்த
இதயக்கதவு வழி நுழைந்தது ...
இள்கிய இடுக்குகளில்
வேர் விட்டு
இதய இரத்தம் பருகி
வளர்ந்தது ..
சூழலின் வெம்மையில்
கவிதை ஒளியில்
மின்னித் துளிர்விட்டது ...
உன் எதிர்ப் படலில்
வானைத் தேடியது ..
உனது முதல் பார்வையில்
ஆயிரம் கிளைகளை விரித்து ...
குறி்ஞ்சியாய் இன்னமும் ...
பூக்கக் காத்திருந்தது ...

Saturday, October 10, 2009

தமிழ் மாணவன்

கருவில்  பிறந்த ஆசையாய் இருக்கலாம் ,

அன்னை முக‌த்தில் படித்தது 

மார் புதைக்கையில் மறைந்து போனது 

தேமா புளிமா என சீர் பிரிக்கையில் 

வெறும் தளைதான் எஞ்சியது

கனவினில் வந்தது 

விடிகையில் க‌லைந்த‌து,

ப‌ய‌ண‌த்தில் வந்த‌வை 

முடிகையில் சென்ற‌து,

கலவியில் பிறந்தது

புலர்கையில் சென்றது

 

போதையில் பூத்தது

பாதையில் காய்ந்தது



உளியின்  கூர்மையுடன் 

எழுத்தெடுத்து

 சுய‌ம்புவாய் ம‌ண்முட்டி வெளிவ‌ருகையில்


"க‌விதை யெழுத‌ முய‌ன்ற‌வன்" என‌ 

க‌ல்ல‌றையில் எழுத‌ வேண்டிய‌த‌யிற்று

அவ‌ன் க‌விதையை..