தலையை புறமிழுத்து
காற்றை உள் வாங்கினான்
கயத்தாறை கடந்தது வண்டி.
Monday, July 19, 2010
பசித்திருந்தவை
சுண்டிய மடுவுடன்
காகிதம் தின்றது
மாலையிலாவது பால்தர
கன்றுக்கு.
நிர்வாண ஓவியத்தில்
பிரகாசமாய் அவள் முகம்
அன்று அவள் வீட்டில்
அடுபெரிந்திருக்கும் .
எடை பார்த்தான்
பார்வையற்றவரிடம்
தினமும்.
காகிதம் தின்றது
மாலையிலாவது பால்தர
கன்றுக்கு.
நிர்வாண ஓவியத்தில்
பிரகாசமாய் அவள் முகம்
அன்று அவள் வீட்டில்
அடுபெரிந்திருக்கும் .
எடை பார்த்தான்
பார்வையற்றவரிடம்
தினமும்.
தெய்வங்கள்
தனித்த நள்ளிரவில்
நெடிய ஒருவழியில்
சோகங்களின் உடனிருப்பில்
உம் அகம் பிரித்தீர்
நான் யாரிடம் .... ?
நெடிய ஒருவழியில்
சோகங்களின் உடனிருப்பில்
உம் அகம் பிரித்தீர்
நான் யாரிடம் .... ?
Wednesday, May 26, 2010
தனித்திருந்தவை
தெருவெங்கும் பூந்தோட்டம்
உன்மீது வடியும் என் அன்பின் எச்சம்
உலகத்தை நிறைக்கிறது
பிற காதல் இணைகளின்
கண் நம்மீது படக்கூடும்
எச்சரிக்கை
தூரமும் காலமும்
செய்யும் சதி கரைகிறது
நம் தொலைஉணர்வில்
பேசும் நேரத்திலும்
பேசா தனிமை இனியது
நம் வசந்தத்தின் அசைபோடல்
என்ன நடனம்
என் இதய துடிப்புக்கு
உன் இமைகள் செய்வது .
காற்றை கையடக்கி
காண்பவரை மடமாக்கும்
தேன்கிண்ண குழந்தை
இன்று நீஎனக்கு.
நான் உன்னை கண்டபின்
காதலனது
என் பேனாவுக்கும்
காகிதத்திற்கும்.
Friday, May 14, 2010
Thursday, January 14, 2010
கவிதை இறந்தது
தமிழர் சாவதை
தமிழகம் நோக்கி-
இருந்தது கண்டு
கவிதை இறந்தது
மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது
கண்ணீரின் வரிகள்
இரத்தத்தில் மறைவதை
கடவுளர் காணாத போது
கவிதை இறந்தது
தமிழகம் நோக்கி-
இருந்தது கண்டு
கவிதை இறந்தது
மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது
கண்ணீரின் வரிகள்
இரத்தத்தில் மறைவதை
கடவுளர் காணாத போது
கவிதை இறந்தது
Saturday, January 9, 2010
நினைவோடை
அன்று
கன்னம் வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கைகள் அற்று
இருந்த போது ...
காற்றின் கைகளோடு உன் நினைவு
உடனிருந்தது
தரைக்கு மேலே அனைத்தும்
காய்ந்த நிலையிலும்
வேரின் ஈர உயிர்ப்பாய்
உன் நினைவு
மட்டும்
கன்னம் வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கைகள் அற்று
இருந்த போது ...
காற்றின் கைகளோடு உன் நினைவு
உடனிருந்தது
தரைக்கு மேலே அனைத்தும்
காய்ந்த நிலையிலும்
வேரின் ஈர உயிர்ப்பாய்
உன் நினைவு
மட்டும்
Subscribe to:
Posts (Atom)
